Tamil Latest news,

ஆர்.எஸ்.எஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்.எஸ்.எஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா


பாரதீய ஜனதா உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவாகி உள்ளது. கட்சியில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையின் மூலம், 8.80 கோடி தொண்டர்களை கொண்டு பாரதீய ஜனதா கட்சி உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக உள்ளது. 2-வது கட்சியாக சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.

ஞாயிறு அன்று பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 8.80 கோடியை எட்டியது என்றும் கட்சியில் இந்த மாதம் இறுதியில்(இன்றுடன்) உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டும் என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளது. பாரதீய ஜனதா கட்சி கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியினை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. பெங்களூரில் வருகிற ஏப்ரல் 3 மற்றும் 4-ம் தேதியில் நடைபெறும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் கூட்டத்தில் கட்சியின் முழு உறுப்பினர் விபரத்தை கட்சியின் தலைவர் அமித்ஷா அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Post Your Ad 100 % Free
கடந்த வருடம் பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதில் இருந்து பாரதீய ஜனதா கட்சி வேகமாக வளரத் தொடங்கியது. பாரதீய ஜனதா கட்சியினை வலுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியினை கட்சியின் தலைவர் அமித்ஷா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வைத்தார். அதிலிருந்து கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். பாரதீய ஜனதாவில் உறுப்பினர் சேர்க்கைக்கு நவீன தொழில்நுட்ப முறை மற்றும் ஆன்-லைனும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நல்லவரவேற்பு கிடைத்து உள்ளது. மொபைல் வாயிலாக மிஸ்டுகால் கொடுத்தவுடன், பதிவுஎண் அனுப்பி வைத்து உறுப்பினர் விண்ணப்பம் வழங்கி கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

சீனாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியே இதுவரையில் 8 கோடியே 60 லட்சம் உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக இருந்தது. அதனை தற்போது பாரதீய ஜனதா முறியடித்து உள்ளது. இதேபோன்று காங்கிரஸ் கட்சியும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி உள்ளது

பாபர் மசூதி இடிப்பு வழக்கு, அத்வானி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

புதுடெல்லி,
POst YOur Ad 100% Free
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக அத்வானி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் கூடிய கரசேவகர்களால், பாபர் மசூதியின் ஒரு பகுதியை இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு பாபர் மசூதி இடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட எல்.கே. அத்வானி, கல்யாண் சிங், உமாபாரதி, வினாய் கட்டியார், முரளி மனோகர் ஜோஷி, சதீஷ் பிரதான், சி.ஆர்.பன்சால், அசோக் சிங்கால் உள்ளிட்ட பலர் அந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் அத்வானி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்களுக்கு எதிராக சதிதிட்டம் குற்றச்சாட்டு தொடர்பாக ஹாஜி மெஹ்பூப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இன்று மனு மீதான விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் கல்யாண் சிங் உள்பட 20 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதுதொடர்பாக 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அபிடவிட்டுடன் வருவதற்கு கூடுதல் காலஅவகாசம் கேட்டுக் கொண்ட சி.பி.ஐ.க்கும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்தியாவில் சிறுபான்மையினர் யாரும் கிடையாது, அனைவரும் இந்துக்களே: ஆர்.எஸ்.எஸ்

undefined
நாக்பூர், 

இந்தியாவில் சிறுபான்மையினர் என்று யாரும் கிடையாது, அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். இணை பொது செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்து உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். கூட்டம் 

மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்மட்ட குழுவான அகில பாரதீய பிரதிநிதி சபாவின் (ஏ.பி.பி.எஸ்) மூன்று நாள் கூட்டம் நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் இருந்து 1,600–க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தின் இடையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணை பொது செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அனைவரும் இந்துக்களே 

இந்தியாவில் சிறுபான்மையினர் என்று யாருமே கிடையாது. இங்கு கலாசார அடிப்படையிலும், தேசிய ரீதியிலும், டி.என்.ஏ. அடிப்படையிலும் அனைவரும் இந்துக்களே. நாங்கள் யாரையும் சிறுபான்மையினராக கருதவில்லை. இந்தியாவில் சிறுபான்மை கருத்து இருக்கக்கூடாது.இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள் என்று மோகன் பகவத் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) 20 தடவை சொல்லி இருக்கிறார். இதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, இல்லையோ, ஆனால் கலாசார, தேசிய மற்றும் டி.என்.ஏ. அடிப்படையில் அனைவரும் சமமானவர்கள் தான்.இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:–

நிலம் கையகப்படுத்தும் மசோதா 

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தபின்னர், அந்த மசோதா மோசமானதாக இல்லை.ஜம்மு–காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் ஷரத்து 370 மீதான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீரில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் சரியானது தான் என்று நாங்கள் கருதவில்லை. இதற்காக அரசு தவறிவிட்டது என்ற முடிவுக்கும் நாம் வந்துவிட முடியாது. இது ஒரு நூதனமான சோதனை. இந்த சோதனை வெற்றிபெற நேரமும், வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

கூட்டணி தர்மம் 

மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும். முழு ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும். இரு கட்சிகளும் வேறுபாடுகளை களைந்து நல்லாட்சிக்கான செயற்பாட்டை உருவாக்க வேண்டும்.இவ்வாறு தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார்
+