உயர் போலீஸ் அதிகாரியின் ‘செக்ஸ்’ தொல்லை: உரையாடலை ‘செல்போனில்’ பதிவு செய்து பெண் போலீசார் வெளியிட்டனர் சென்னையில் பெரும் பரபரப்பு

undefined
பாலியல் தொல்லை தாங்க முடியாததால், உயர் போலீஸ் அதிகாரி ஆபாசமாக பேசியதை செல்போனில் பதிவு செய்து, பெண் போலீசார் ‘வாட்ஸ்அப்பில்’ வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால், சென்னை போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பரபரப்பான உரையாடல்

‘இந்திரன் கெட்டது பெண்ணால.... சந்திரன் கெட்டது பெண்ணால... நம்ம அண்ணன் கெட்டது எதனால’ என்று ஒரு திரைப்பட பாடல் உள்ளது. இந்த பாடலை தற்போது, சென்னையில் பணியாற்றி வரும் உயர் போலீஸ் அதிகாரியை பார்த்து, மற்றவர்கள் பாடத்தொடங்கியுள்ளனர்.

அதற்கு காரணம், உளவுப்பிரிவு போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஐகோர்ட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடந்த 2 நாட்களாக ‘வாட்ஸ் அப்பில்’ ஒரு பரபரப்பான ‘ஆடியோ பைல்’ உலாவிக்கொண்டிருக்கிறது.

அதாவது, பெண் போலீசின் அழகை வர்ணித்து, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் பேசும் உரையாடல்தான் அது. அந்த பெண்ணின் அழகில் மயங்கி அந்த ‘மன்மதராசா’ போலீஸ் அதிகாரி உணர்ச்சி வசப்பட்டு பேசுவதும், அதற்கு அந்த பெண் போலீஸ் பயந்து பயந்து பதில் சொல்லுவதுமாக உள்ளது.

அந்த உரையாடல் மூலம் அந்த பெண் போலீசுக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் இருப்பதாக தெரியவந்து உள்ளது.

பாலியல் தொல்லை

அந்த உரையாடலின்போது, அந்த பெண் போலீஸ் அருகில், யாரோ சிலர் நின்றுகொண்டு சொல்லிக் கொடுப்பது தெரிகிறது. அவர்கள் மெல்ல பேசுவதுகூட கேட்க முடிகிறது. இந்த உரையாடல் சென்னை ஐகோர்ட்டு வளாகத்துக்குள் நடந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட பெண் போலீசை, அந்த உயர் அதிகாரி கடந்த சில மாதங்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகவும், அதை தாங்க முடியாமல், பெண் போலீசார் சிலர் கும்பலாக சேர்ந்து, அந்த அதிகாரி பேசியதை பதிவு செய்து, ‘வாட்ஸ்அப்பில்’ வெளியிட்டுள்ளதாகவும், இதுகுறித்து டி.ஜி.பி., போலீஸ் கமிஷனரிடமும் புகார் செய்ய தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு அதிகாரி

இதுபோல, ஏழுகிணறு காவல் நிலையத்தில் உள்ள ஒரு அதிகாரி பற்றிய ஆதாரமும் தயாராக வைத்திருப்பதாகவும், பத்திரிகையாளர்கள் கேட்டால் தர தயாராக இருப்பதாகவும் ஒரு பெண் போலீசின் கணவர் எழுதியது போன்ற ஒரு கடிதமும் உலா வந்துகொண்டிருக்கிறது

0 comments:

கருத்துரையிடுக

+