Tamil Latest news,

பொதுஅறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுஅறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கல்விக்கு வயது ஒரு தடையில்லை: 62 வயதில் பிளஸ்-1 தேர்வு எழுதும் பெண்

undefined
கோழிக்கோடு

கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக மலப்புரம் மாவட்டத்தில் 62 வயது பெண் ஒருவர் பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளார்.

இதுகுறித்த விவரம் வருமாறு:-

ஆஸ்பத்திரி விடுதி வார்டன்

மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மும்தாஜ்(வயது 62). இவரது கணவர் மாட்டாயி ஆலி(70). வயதாகி விட்டதால் வேலைக்கு எதுவும் செல்வதில்லை. மும்தாஜ் முக்கம் மன்னாசேரி கே.எம்.சி.எச். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பெண் டாக்டர்களுக்கான விடுதியில் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நிஷாத், நியாஸ் என்ற 2 மகன்கள். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. இருவருக்கும் தலா 2 குழந்தைகள் உள்ளனர். நிஷாத் அந்த பகுதியிலேயே கூலிவேலை செய்து வருகிறார். நியாஸ் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

அணையாத ஆசை

அப்போது மும்தாஜ் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். மேற்கொண்டு படித்து ஏதாவது நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே அப்போதைக்கு அவருடைய லட்சியமாகவும் கனவாகவும் இருந்தது. ஆனால் அவரது கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் திருமணம் மூலம் பெரிய தடை விழுந்தது. 10-ம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும்போதே அவரை மத்தாய் ஆலிக்கு திருமணம் செய்து வைத்தனர் அவரது பெற்றோர். இதனால் அவர் தனது கனவுகளை சிறிது காலம் தள்ளிப்போட்டு கணவர் மற்றும் குழந்தைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் அணையாத நெருப்பு போல அவருக்குள் எரிந்து கொண்டு இருந்தது.

காலங்கள் கடந்து குழந்தைகள் பெரியவர்களாகி விட்டனர். கணவன் உடல் நலனை கருத்தில் கொண்டு மருத்துவமனை விடுதியில் வார்டனாக வேலைக்கு சேர்ந்தார் மும்தாஜ். இந்த நிலையில் அவரது கனவுகளுக்கு விதை போடுவது போல் நிலம்பூர் நகராட்சி சார்பில் ‘அனைவருக்கும் 10-வகுப்பு கல்வி‘ என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வேலைக்கு சென்றபடி படித்தார்

அதன்படி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10-வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு என தனி பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதை கேள்விப்பட்டதும் மும்தாஜின் மனதில் புதைந்து கிடந்த ஆசை சிறகு முளைத்து பறக்க தொடங்கியது. உடனடியாக அந்த பயிற்சி மையத்தில் 10-வகுப்பு சேர்ந்தார்.

வேலைக்கு சென்றபடியே விடுமுறை தினங்களில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றார். தொடர்ந்து நடந்த 10-வகுப்பு தேர்வில் 4 பாடங்களில் முதல் தர மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றார். அது அவருக்கு புது நம்பிக்கையை தந்தது. இதனால் மீண்டும் பிளஸ்-1 வகுப்பிலும் சேர்ந்தார். அதே நேரத்தில் வேலைக்கு சென்று வந்தார். அவர் வகுப்புக்கு வராவிட்டாலும் மற்ற மாணவிகள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது தனது 62-வது வயதில், கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பிளஸ்-1 தேர்வு எழுதி வருகிறார். நகராட்சியின் இந்த திட்டத்தின் மூலம் மும்தாஜுடன் ஜமீலா என்ற 50 வயது பெண், நகராட்சி கவுன்சிலர் ரஜினி ராஜன் மற்றும் சி.டி.எஸ். இயக்க நிர்வாகி எம்.கே.உஷாகுமாரி ஆகியோரும் பிளஸ்-1 தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற வேண்டும்

மும்தாஜுக்கு முக்கம் அருகே உள்ள சுங்கத்தறை எம்.பி.எம். பள்ளியில் தேர்வறை ஒதுக்கப்பட்டு உள்ளது. முக்கத்தில் இருந்து சுங்கத்தறை சென்று தேர்வு எழுதி விட்டு மீண்டும் வேலைக்கு திரும்பி வருகிறார். நேற்று முன்தினம் அவருக்கு சமூக அறிவியல் தேர்வு நடந்தது. அதில் 4 மதிப்பெண்ணுக்கான ஒரு கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்.

அடுத்த திட்டம் என்ன? என்று அவரிடம் கேட்டதற்கு, பெரிய திட்டம் எதுவும் இல்லை. அடுத்தகட்டமாக பிளஸ்-2 தேர்விலும் வெற்றி பெற வேண்டும். அவ்வளவு தான் என்றார். எளிய மனிதர்களின் ஆசைகள் எப்போதும் எளியவை தான் இல்லையா?.

ஆனால் இதன் மூலம், காத்திருத்தலும், கனவுகளின் மீதான காதலும், தீராத வேட்கையும் இருந்தால் காலங்கள் கடந்தாலும் நமக்கான லட்சியங்களை அடையலாம் என்ற நம்பிக்கையின் அணையாத ஒளியை நமக்கு அவர் அளித்திருக்கிறா

சென்னை ஐகோர்ட்டு கட்டிடத்தின் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள நடை பயணம்

undefined
நமது நாட்டில் உள்ள பாரம்பரிய கட்டிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை மற்றும் கலாசார பாரம்பரிய இந்திய தேசிய அறக்கட்டளை (இன்டேக்) சார்பில் சென்னை ஐகோர்ட்டு இயங்கி வரும் பாரம்பரிய கட்டிட வளாகத்தின் உள்ளே நேற்று ‘பாரம்பரிய நடை’ பயணம் நடைபெற்றது. இந்த பாரம்பரிய பயணத்தில் மாணவிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வெளிநாட்டு பெண் ஒருவர் பங்கேற்றார்.

அவர்களுக்கு, ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள், அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றின் பாரம்பரியம், வரலாறு மற்றும் கட்டிட கலைக்கு சான்றாக உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து கலை மற்றும் கலாசார பாரம்பரிய இந்திய தேசிய அறக்கட்டளையின் சென்னை ஒருங்கிணைப்பாளர் சுஜாதா சங்கர், பாரம்பரிய கமிட்டியை சேர்ந்த ராஜா ஆகியோர் எடுத்துக்கூறினார்கள்.

இதுகுறித்து சுஜாதா சங்கர் கூறுகையில், “நமது நாட்டில் உள்ள பழமைவாய்ந்த பாரம்பரிய கட்டிடங்களைப்போல இப்போது கட்டுவதற்கு கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் பருவத்துக்கு ஏற்றவாறு தொழில்நுட்பம் மற்றும் கலை நயத்துடன் கட்டுவதற்கு என்ஜினீயர்கள் இல்லை. ஆகவே கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இந்த பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்து, வருங்கால சந்ததியினரும் அறிந்துகொள்ள செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த பாரம்பரிய நடை பயணத்தை மாதந்தோறும் நடத்தி வருகிறோம்.”

கடனே வாங்கக் கூடாதா?

சிலர், 'நான் எப்பவும், யார்கிட்டயும் கைநீட்டிக் கடன் வாங்க மாட்டேன்'என்று பெருமையாகக் கூறுவார்கள். பாராட்டுக்குரிய விஷயம்தான். ஆனால் எந்தக் கடனுமே வாங்கக் கூடாது என்று முரட்டுத்தன பிடிவாதமாக இருப்பது சரியா என்பது பரிசீலனைக்குரியது.

'வரவுக்குள் செலவை அடக்கிக்கொள்ள வேண்டும்'என்பதை மட்டும் உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டு, நமது முன்னேற்றத்துக்கான கடன்களைக் கூட ஒதுக்குவது புத்திசாலித்தனமல்ல.

உதாரணமாய், வீட்டுக் கடன், வீட்டு மனைக் கடன், கல்விக் கடன் போன்றவற்றைச் சொல்லலாம். இன்றைய நிலையில், வீடு கட்டத் தேவையான பணத்தையெல்லாம் சம்பாதித்துச் சேர்த்தபின் அந்த வேலையைத் தொடங்குவேன் என்று கூறினால் கேட்பவர்கள் நகைப்பார்கள்.

அப்படியே நீங்கள் வீட்டு மனை வாங்குவது, வீடு கட்டுவதற்கான பணத்தை சேமித்துச் சேர்ப்பதாக வைத்துக்கொண்டாலும், சேமித்து தயாராவதற்குள் விலையெல்லாம் எங்கோ போயிருக்கும். ஆக, இன்றைய சூழலில் இது சாத்தியமில்லை என்றே கூறிவிடலாம்.

வீட்டுக் கடனுக்கு நீங்கள் செலுத்தும் மாதாந்திர தவணைத் தொகை, சில வருடங்களில் அப்போதுள்ள வாடகை நிலைக்குச் சமமாக வந்திருக்கும். எனவே சொந்த வீட்டுக்கு வாடகை செலுத்துவது போல அதைச் செலுத்திக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

விரைவாக வளர்ந்து வரும் பகுதியில் ஒரு மனை விலைக்கு வருகிறது. எதிர்காலத்தில் வீடு கட்டவோ, வர்த்தகரீதியாகப் பயன்படுத்தவோ அது வசதியாக இருக்கும் என்றாலும் யோசிக்காமல் மனைக் கடன் மூலம் அதை வாங்கிவிடலாம்.

மாறாக, 'ஆசைப்பட்டு என்ன செய்ய? கையில் காசில்லையே... கடன் கிடன் என்று போய் எதிர்காலத்தில் யார் அவதிப்படுவது?'என்று தத்துவம் பேசிக்கொண்டிருந்தால் பின்னர் இழப்பு உங்களுக்குத்தான்.

'அப்போ அடிமாட்டு விலைக்கு அந்த இடம் வந்தது. நான்தான் வாங்க வேண்டுமா என்று யோசித்தேன். அப்போது அங்கே இங்கே பணத்தைப் புரட்டி அந்த இடத்தை வாங்கிய சுந்தரம் இன்று அந்த இடத்துக்கு கோடிகளில் விலை பேசுகிறான்'என்று பலரும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டிருக்கலாம்.

சம்பாதிக்கும் இளைஞர்கள், வீட்டுக் கடன், மனைக்கடன் போன்ற ஆக்கபூர்வமான கடன்களை சீக்கிரமே பெறுவது நல்லது. கல்யாணமாகாத நிலையில், இளைஞர் களுக்கு நிதி சார்ந்த பொறுப்புகள் குறைவாக இருக்கும். அப்போது கையில் அதிக பணப்புழக்கம் இருந்தால் வீண் செலவுகள், தேவையற்ற பழக்கங்கள் என்று பணம் கரைவதற்கு வாய்ப்பு அதிகம்.

ஒரு கடனுக்கான மாதாந்திரத் தவணை என்ற கட்டாயம் ஏற்படும்போது மேற்கண்ட விஷயங்கள் தவிர்க்கப்படும். திருமணமாகும்போது சொந்த வீடு அல்லது குறைந்தபட்சம் வீடு கட்டுவதற்கு சொந்தமாக ஒரு மனை இருப்பது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்பதை உணர்ந்து பார்த்தால் தெரியும்.

அதேபோல, படிக்கிற வயதிலேயே மகன் அல்லது மகளை கடன்காரர்களாக்குவதா என்று கல்விக் கடன் பெறுவதைத் தவிர்ப்பதும் சரியல்ல. கல்வியானது ஒரு தலைமுறையின் தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது என்கிறபோது, தயங்காமல் கல்விக் கடன் பெற்று, விரும்பிய உயர்படிப்பைப் படிக்கலாம்.

இப்படி வாழ்க்கையில் முன்னேற்றத் திசை நோக்கிப் பயணிக்க உதவும் கடன்களை வாங்கத் தயங்கக் கூடாது என்கிறபோது, கார் கடன், ஆடம்பரப் பொருட்களைத் தவணை முறையில் வாங்குவது போன்றவற்றை ஒரு முறைக்கு இருமுறை  பரிசீலனை செய்து இறங்குவது அவசியம்.

கடன் என்கிற சமாச்சாரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதும், புதைகுழி போல அதற்குள் கண்ணை மூடிக்கொண்டு விழுவதும் நம் கையில்தான் இருக்கிறது

உலக மகா கஞ்சன்!



பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஜான் ஓவர்ஸ் என்ற பணக்காரர் வாழ்ந்தார். அவர் தன்னிடம் ஏராளமாகப் பணம் குவிந்திருந்தும் மகா கஞ்சனாகவே வாழ்ந்தார். தன் உணவான ரொட்டியைக் கூட சூடுபடுத்த அடுப்பை உபயோகிக்காமல் தன் சட்டைக்கு அடியில் உடலோடு ஒட்டி வைத்து உடலின் சூட்டில் அதை வெப்பப்படுத்தி உண்ணும் அளவுக்குக் கஞ்சன்.
ஒருமுறை ஓவர்ஸ் தன் வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்ற ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி, தான் இறந்துவிட்டதுபோல ஆடைகளைப் போர்த்தியபடி படுக்கையில் படுத்துக்கொண்டு நடித்தார்.

இறந்துவிட்ட எஜமானனிடம் சம்பளம் வாங்க முடியாது என்று வேலைக்காரர்கள் சென்றுவிடுவார்கள் என்பது ஜான் ஓவர்ஸின் எண்ணம்.
ஆனால் ஜான் ஓவர்ஸ் இறந்ததாகக் கேள்விப்பட்ட வேலைக்காரர்கள் மிகவும் சந்தோஷம் கொண்டு வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்ல முற்பட்டனர். தன் திட்டம் பாழாவதைக் கண்டு பொறுக்காத ஓவர்ஸ், படுக்கையறையில் இருந்து எழுந்து நின்றார். வேலைக் காரர்களைத் தடுக்க குரல் எழுப்பினார்.

'இறந்த'ஓவர்ஸ் எழுந்து நிற்பதைக் கண்ட வேலைக்காரன் ஒருவன், நிற்பது ஓவர்ஸின் ஆவி என்று கருதி பயப் பதற்றத்தில் மரக்கட்டையால் ஓங்கி அடிக்க, ஓவர்ஸ் மண்டை பிளந்து உண்மையிலேயே இறந்துவிட்டார்.

தந்தை இறந்தபின் ஓவர்ஸின் ஒரே மகள் கன்னிமடத்தில் சேர்ந்தார். தன் தந்தையின் பெயரால் மேரி அன்னைக்கு ஓவர்ஸின் செல்வத்தால் ஒரு தேவாலயம் அமைத்தார். இன்றும் அக்கோவில் 'செயின்ட் மேரி ஓவர்ஸ்'என்று இங்கிலாந்தில் அழைக்கப்படுகிற
+