குடித்து விட்டு இளம் பெண் ரோட்டில் போலீசாருடன் ரகளை வீடியோ

undefined
இந்தோனேஷியாவை சேர்ந்தவர் இளம் பெண் ஸ்டிவாணி கடந்த சில நாட்களுக்கு ஜகர்தா நகரின் தென்பகுதியில் உள்ள ஜலன் அண்டாசாரி என்ற இடம் அருகே கார் ஓட்டி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் மது அருந்தி இருந்தார்.

அப்போது நிலை தடுமாறி ரோட்டு ஓரம் இருந்த் தடுப்பில் கார் மோதியது இதில் அவரது காரின் இரண்டு சக்கரங்களும் வெளியே வந்து விட்டன. தகவல் அறிந்த ரோந்து போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது டிவி கேமரா மேன் ஒருவர் அதை படம் பிடித்து கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண் கேமிராமேனுடன் தகராறு செய்து அவரை தாக்கினார். கேமிராமேனை பின் தொடர்ந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். காட்சிகளை படம் பிடிக்க கூடாது என வாதிட்டார்.

ஆனால் அவர் பத்திரிகையாளரை தாக்க முயன்றது அவர்களுடன் சண்டை போட்டதே சுவராஸ்யமான் காட்சிகளாக இருந்தது. அவர் குடித்து விட்டு இவ்வாறு நடந்ததால் ஆங்காங்கே விழுந்து எழுந்து வந்து சண்டை போட்டார். போலீசார் அவர் மீது குடித்து விட்டு கார் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர் அவர் கைது செய்யும் போதும் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார்

0 comments:

கருத்துரையிடுக

+