Tamil Latest news,

நடிகர் அஜித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடிகர் அஜித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மூக்கில் சதை வளர்ச்சி நடிகர் அஜித்குமாருக்கு ’ஆபரேஷன்’

undefined
சென்னை,

அஜித்குமார் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக இருந்தார். ஒரு பந்தயத்தில் அவர் கலந்து கொண்டபோது, முதுகில் அடிபட்டது. இதற்காக அவருடைய முதுகில், ’ஆபரேஷன்’ நடந்தது. ஆபரேஷனுக்குப்பின் அஜித்குமார் முழுமையாக குணம் அடைந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

கடந்த வருடம் அவர் ஐதராபாத்தில் நடந்த ’ஆரம்பம்’ படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது, காலில் பலத்த அடிபட்டது. டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டபின், தொடர்ந்து அவர் நடித்து வந்தார்.’

’’அடிபட்ட காலில் ’ஆபரேஷன்’செய்து கொண்டால் பிற்காலத்தில் பாதிப்பு இருக்காது. ஆனால், ஆபரேஷனுக்குப்பின் மூன்று மாதங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும்’’ என்று டாக்டர்கள் கூறினார்கள். அத்தனை நாட்கள் ஓய்வு எடுக்க முடியாது என்பதால், காலில் ’ஆபரேஷன்’ செய்து கொள்வதை அஜித்குமார் தள்ளிப்போட்டு இருக்கிறார்.

இந்த நிலையில், அவருடைய மூக்கின் உள்பக்கம் அதிக சதை வளர்ச்சி காரணமாக, மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதற்காக, அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இன்று காலை 5-30 மணிக்கு ’ஆபரேஷன்’ நடந்தது.

மூக்கின் உள்ளே வளர்ந்திருந்த சதை, ’ஆபரேஷன்’மூலம் நீக்கப்பட்டது. அஜித்குமாருக்கு பிரபல காது-மூக்கு-தொண்டை நிபுணர் டாக்டர் கே.ராஜசேகர், ’ஆபரேஷன்’ செய்தார். ஆபரேஷனுக்குப்பின், அஜித் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வீட்டில் சில நாட்கள் ஓய்வு எடுத்தபின், அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி, அஜித் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இந்த படத்தை சிவா டைரக்டு செய்கிறார். பட அதிபர் ஏ.எம்.ரத்னத்தின் மருமகள் ஐஸ்வர்யா தயாரிக்கிறா

நடிகர் அஜீத்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை குவியும் வாழ்த்துக்கள்


சென்னை,

அஜீத்தும் ஷாலினியும் 1999-ல் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது  இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2000-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். 2008-ல்  இவர்களுக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அனோஷ்கா என பெயரிட்டனர்.  இப்போது இந்த நட்சத்திர தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்து உள்ளது.

கர்ப்பமாக இருந்த ஷாலினிக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஷாலினுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அஜீத்தும் ஆஸ்பத்திரியில் இருந்தார். மகன் பிறந்ததும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார். உறவினர்களும், நண்பர்களும் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தையை பார்த்தனர். அஜீத்துக்கு சக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் போனில் வாழ்த்து கூறி னார்.

அஜீத் நடித்த என்னை அறிந்தால் படம் சமீபத்தில் ரிலீசானது. தற்போது அவர் ஓய்வு எடுக்கிறார். அடுத்த பட வேலைகள்  இரு மாதங்கள் கழித்து தொடங்கும் என தெரிகிறது.

வாழ்த்துக்கள்

Suhail Chandhok: Huge congratulations to one of the nicest couples I know #Ajith & #Shalini on their new bundle of joy! Can't wait to go see #KuttyThala :D. Both #Ajith & Shalu are SUCH doting parents & more than anything I'm sure Anoushka is going to act like a lil grandma to #KuttyThala #Happy

Vikram Prabhu: Wishing Ajith sir's Family on the New born! Happiest times start now!

Sivakarthikeyan: Kutty Thala Arrived Congrats. Ajith Sir and Shalini Mam

Anjali: My hearty wishes to #ajith sir #shalini on their very special day ..


    Wishing Ajith sir's Family never-ending peace and joy with the new born..kutty thala!!

    — D.IMMAN COMPOSER (@immancomposer) March 2, 2015

அருண் விஜய் மாமா” அப்பா படத்தில் நடித்தற்கு நன்றி அஜித் மகள் கடிதம்

undefined
சென்னை,

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித், திரிஷா, அனுஷ்கா, நடித்துள்ள என்னை அறிந்தால் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அஜித் மகள் அனோஷ்கா அதில் நடித்து உள்ள நடிகர் அருண் விஜய்க்கு கடிதம் எழுதி உள்ளார் . இந்த கடித்தை படித்து பார்த்து நெகிழ்ந்து போன நடிகர் அருண் விஜய் அனோஷ்காவை பாராட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

என்னை அறிந்தால் முன்னோட்டம் நிகழ்ச்சி நடந்த பிறகு  அனோஷ்கா வந்து என்னிடம் ஓடி வந்து என்னிடம் ஒரு கடிதம் கொடுத்தார்.அந்த கடித்தை  படித்த பிறகு நான் நெகிழ்ந்துபோனேன். இதை நான் ஒரு பரிசாக கருதுகிறேன். அதற்கு நான் பதில் கடிதம் எழுதி உள்ளேன். அஜித்தின் குட்டிதேவதை அனோஷ்காவின் கடிதத்திற்கு நன்றி என்று அருண்விஜய் பதில் கடித்ததில் எழுதி உள்ளார்.

அஜித் மகள் அனோஷ்கா அருண் விஜய்க்கு எழுதியுள்ள கடித்ததில் கூறியுள்ளதாவது:

முதல் முறையாக வில்லன் வேடத்தில் நடித்த உங்களுக்கு பாராட்டுக்கள் அருண் விஜய் மாமா. இந்த படத்தில் சில காட்சிகள் பயங்கராமாக இருந்தது. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் உங்கள் நடிப்பு சூப்பர். சில காட்சிகளில் நான் சோகமாக உணர்ந்தேன் என் தந்தையுடன் நடித்ததற்கு நன்றி' அருண் விஜய் மாமா என்று அனோஷ்கா குறிப்பிட்டுள்ளார்

அஜித்திடம் இருந்து அனைத்து நடிகர்களும் பணிவை கற்றுக்கொள்ள வேண்டும்-­வித்யூ ராமன்.


தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகைகளில் ஒருவர் வித்யூலேகா. இவர் தொடர்ந்து முன்னணி நாயகர்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நீ தானே என் பொன்வசந்தம், வீரம், ஜில்லா ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகையாக கலக்கியவர் வித்யூலேகா ராமன்.

இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘என்னை அறிந்தால் படத்திற்கு நான் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தேன், அவர் இன்று எனக்கு “வேலைப்பளு காரணமாக என்னை பார்க்க முடியவில்லை, தகவலை தாமதமாக உங்களுக்கு அனுப்பியதற்கு மன்னியுங்கள்”’ என்று அஜித் கூறியதாக டுவிட் செய்திருந்தார்.

இது மட்டுமில்லாமல் மேலும் ‘அவரிடம் இருந்து அனைத்து நடிகர்களும் இந்த பணிவை கற்றுக்கொள்ள வேண்டும், இதனால், தான் இவர் இந்த உயரத்தில் இருக்கிறார்’ என டுவிட் செய்துள்ளார்.

இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் வித்யூலேகா பகிர்ந்துள்ளார். தல மேஸேஜுடன் எழுந்தேன். நான் என்னை அறிந்தால் படத்திற்கு ஆல் த பெஸ்ட் என அனுப்பியதற்கு இப்போது பதிலுடன் கூடவே மன்னிக்கவும் எனவும் அனுப்பியுள்ளார்.என்ன ஒரு ஸ்டார். வாவ் என ட்விட்டரில் மெய்சிலிர்த்துள்ளார்

கவர்ச்சியான நடிகர் வாக்கெடுப்பில் பாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளிய அஜித்

இந்தியாவில் கவர்ச்சியான் நடிகர்கள் குறித்த வாக்கெடுப்பு ஒன்றை  பாலிவுட் லைப் என்ற இணையதளம் நடத்தியது. இதில் பாலிவுட் நடிகர்கள் அமீர்கான்,அக்‌ஷய் குமார்,ஆகியோரை பின்னுக்கு தள்ளி அஅதிக ஓட்டுகளை அஜித் பெற்று உள்ளார்.

வாக்கெடுப்பு பட்டியலில் அமீர்கான், அக்‌ஷய்குமார், மிலந்த் சோமன்,ஹாலிவுட் நடிகர்  ஜார்ஜ் குளோனி ஆகியோர் இடம் பெற்று இருந்தனர் இதில் தமிழ் நடிகர் அஜித் குமாரும் இடம் பெற்று இருந்தார் அவர் அதிக அளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பாலிவுட் லைப் வாசகர்கள் அஜித்துக்கு 79.5 சதவீத ஓட்டு அளித்து உள்ளனர்.அடுத்து அக்‌ஷய் குமாருக்கு 13.77 சதவீத ஓட்டுகளும், ஜார்ஜ் குளோனிக்கு 3.7 சதவீத ஓட்டுகளும், அமீர் கானுக்கு 1.92 ஓட்டுகளும் மிலந்த் சோமனுக்கு 0.85 ஓட்டுகளும் கிடைத்து உள்ளது.

 சால்ட் பெப்பர் ஸ்டைலில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளோனி இருப்பார் எனப்து குறிப்பிட தக்கது.  மங்காத்தாவில் இந்த ஸ்டைலில் தான் முதன் முதலாக நடிகர் அஜித் தோன்றினார் அது சிறப்பாக பேசபட்டது.இதேபோல் சால்ட் பெப்பர் ஸ்டைலில் பிரதர்ஸ் படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் தோன்றினார்.

இதே சால்ட் பெப்பர் ஸ்டைலில் தான் அமீர்கான் தனது அடுத்த ’டாங்கள்’ படத்தில் தோன்ற உள்ளார்.
+