Tamil Latest news,

ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நம் பெற்றோர்கள் 60 வயதை எட்டிவிட்டால், அவர்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி எனும் 60ம் கல்யாணத்தை செய்கிறோம். இதை ஏன் செய்ய வேண்டும்? இது எல்லோரும் கட்டாயமாக செய்ய வேண்டிய சடங்கா? இதற்கு சத்குரு தரும் பதில் இங்கே.

சத்குரு: 
நம் பாரம்பரியத்தில் ஒரு குழந்தை பிறந்து 12 வயது ஆகும் வரை, அந்த பருவத்தை, பாலாவஸ்தா என்பார்கள். அப்போது குழந்தை செய்வதெல்லாம், விளையாட்டு, சாப்பாடு, தூக்கம் அவ்வளவுதான். அதற்கு மேல் அவன் ஏதும் செய்யத் தேவையில்லை. 12 வயது நிறைவுற்றதும் அவனுக்கு பிரம்மோபதேசமும் அதன்பின் வித்தியாபியாசம் அதாவது கல்வி கற்பித்தலும் நடக்கும். பிரம்ம உபதேசம் என்பது இது எனது, இது எனதில்லை என்று பிரித்துப் பார்க்காமல் அனைத்திலும் பிரம்மனைக் காணக் கற்றுத் தருவது. இந்த தன்மை இல்லாத மனிதருக்கு கல்வி கற்பிக்கக் கூடாது. ஏனெனில் கல்வி என்பது ஒரு பெரும் சக்தி. அவர், இவர், எனது, எனதில்லை, வேண்டும், வேண்டாம் என்று பிரித்துப் பார்க்கும் மனிதருக்கு சக்தியைக் கொடுத்துவிட்டால் அவரால் பிரச்சனைகள்தான் ஏற்படும்.
undefined
எனவே 12 வயதில் பிரம்மோபதேசம் கொடுத்து அதன்பின் அடுத்த 12 வருடங்கள் அதாவது 24 வயது வரை வித்தியாபியாசம் கொடுத்தார்கள். அவன் தன் வீட்டில் இருக்கக்கூடாது. ஒரு குருவிடம் சென்று அங்கேயே தங்கி அனைத்தையும் கற்றுக் கொள்வான். அப்போது அவனுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவை போதிக்கப்படும். இந்த நிலையை பிரம்மச்சரியம் என்றார்கள். 12 வருடங்கள் குருவிடம் தேவையான கல்வி கற்று தன் 24வது வயதில் தேவையான அறிவு பெற்றவராக இருப்பார். இப்போது அவருக்கு ஆர்வம் இருக்கும்பட்சத்தில் பிரம்மச்சரிய நிலையிலிருந்து துறவு நிலைக்கு நேரடியாகச் சென்றுவிடலாம். அல்லது திருமணம் செய்து கொண்டு அடுத்த 24 ஆண்டுகள் இல்லற வாழ்க்கையில் இருக்கலாம்.

அந்த 24 வருட தாம்பத்திய வாழ்க்கையின் பிறகு, அதாவது அவருடைய 48வது வயதில், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி இருப்பார்கள். இந்த நேரத்தில் கணவன், மனைவி இருவரும் தனித்தனியாகப் பிரிந்து சன்னியாசம் எடுப்பார்கள். ஓரிடத்திற்கு சென்று 12 வருடம் ஆன்மீக சாதனை செய்து தன்னை உணர்ந்த நிலையில் திரும்பி வருவார்கள். 12 வருடங்கள் தனித்தனியாக இருந்த கணவனும் மனைவியும் இப்போது அவருடைய 60வது வயதில் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

அவர்களுக்கு முதல் முறை திருமணம் நடந்தபோது அவர்களுக்கு உடல் ஆர்வம் முக்கியமாக இருந்தது. ஆனால் இப்போது கணவனுடைய 60வது வயதில், அவர்கள் இருவரும் உடல் ஆர்வத்தினால் ஒன்று சேரவில்லை. வேறு ஒரு ஆழமான தன்மையை உணர்ந்த நிலையில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இப்போது இவர்கள் காட்டிற்குச் சென்று மீதி வாழ்க்கையை வேறொரு தன்மையில் ஒன்றாக சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். இந்த வாழ்க்கையைத்தான் வானப்பிரஸ்தா என்றனர். வானப்பிரஸ்தா செல்லும்முன், அவர்கள் ஏற்கனவே 12 வருடங்கள் பிரிந்திருந்ததால், அவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து அனுப்பும் வழக்கம் நமது கலாச்சாரத்தில் இருந்தது.

ஆனால் இப்போது வீட்டில் சேர்ந்து வாழ்ந்து கொண்டே 60வது வயதில் மீண்டும் இன்னொரு முறை திருமணம் செய்து கொள்கிறார்கள். இதில் ஒன்றும் அர்த்தமில்லை. இப்போது இது வெறும் சடங்காகத்தான் இருக்கிறது

முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் !

தமிழ் செய்திகள்   முக்கிய தகவல்கள்  நாட்டு . நடப்பு  உலக செய்திகள் ...
undefined முனிவர் ஒருவர், நடுக்காட்டில் ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை மேற்கொண்டு வந்தார். அவர் மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவராக இருந்தார். கடும் தவத்தின் காரணமாக சில சித்து விளையாட்டுக்கள் அவருக்கு தெரிந்திருந்தது. அதன் காரணமாக அவரது புகழ் நாடு முழுவதும் பரவியது. இதையடுத்து முனிவரைப் பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். மக்களின் புகழ்ச்சியானது, முனிவர் மீது படத் தொடங்கியதும், அவருக்கு தன்னைப் பற்றிய கர்வமும் சற்று தலை தூக்கிவிட்டது. இந்த நிலையில் முனிவரைப் பார்ப்பதற்காக இளைஞன் ஒருவர் வந்திருந்தான். முனிவரை வணங்கிய அவன் பின்பு அவரிடம் பேசத் தொடங்கினான். ‘சுவாமி! உங்கள் சக்தி பற்றி கேள்விபட்டே நான் வந்திருக்கிறேன்’ என்றான். அவனது இந்த சொல் முனிவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து அவனிடம் பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது யானை ஒன்று அந்த ஆசிரமத்தின் பக்கமாக வந்தது. அதைக் கண்ட இளைஞன், ‘சுவாமி! தங்களால் அந்த பலம் பொருந்திய யானையை கொல்ல முடியுமா?’ என்று கேட்டான். ‘இதெல்லாம் எனக்கு பெரிய காரியமே அல்ல. இப்போது பார்’ என்று கூறிய முனிவர், தன்னுடைய கமண்டலத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து மந்திரத்தை ஜெபித்து அந்த யானை இருந்த திசை நோக்கி வீசினார். அவ்வளவுதான். என்ன ஆச்சரியம். அந்த யானை அடுத்த வினாடியே சுருண்டு விழுந்து இறந்தது. இதை ஆச்சரியத்துடன் பார்த்த இளைஞன் மீண்டும் முனிவரிடம் திரும்பி, ‘சுவாமி! உங்கள் மந்திர சக்தியைக் கண்டு பிரமித்து போய் விட்டேன்’ என்றான். முனிவருக்கு பெருமை பிடிபடவில்லை. கர்வத்துடன் அதை ஆமோதித்தார். பின்னர் அந்த இளைஞன், ‘சுவாமி! இப்போது இறந்து கிடக்கும் யானையை உங்களால், மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியுமா?’ என்று கேட்டான். ‘என்னால் முடியாதது என்று எதுவும் இல்லை. நீ இப்போது கூறியதையும் கூட என்னால் செய்ய முடியும். இதோ பார்’ என்று கூறிய முனிவர், மீண்டும் கமண்டலத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து இறைவனை ஜெபித்து யானை மேல் தெளித்தார். அடுத்த வினாடியே யானை உயிர்ப்பெற்று, அங்கிருந்து ஓடி காட்டிற்குள் மறைந்தது. இப்போது இளைஞன், அந்த முனிவரைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டான். ‘சுவாமி! நீங்கள் முதலில் யானையைக் கொன்றீர்கள். பின்னர் அதைப் பிழைக்க வைத்தீர்கள். இதனால் நீங்கள் பெற்ற பலன் என்ன?. இதனால் என்ன ஆன்மிக வளர்ச்சியை அடைந்தீர்கள்? நீங்கள் இப்போது செய்த சித்து விளையாட்டு, கடவுளை நீங்கள் எளிதாகக் காண உங்களுக்கு உதவி புரியுமா?. அது மட்டுமில்லாமல், இறைவனின் அருளைப் பெற்ற ஒருவன், விலை மதிப்பில்லாத ஞானம், வைராக்கியம், பக்தி போன்றவற்றை விட்டுவிட்டு சித்துக்களைச் செய்யத் தொடங்குவது தவறு இல்லையா? இந்த மந்திர தந்திரங்கள் எல்லாம் இறைவனுக்குப் பிடிக்குமா?. மேலும் கடவுளை அடைவதற்கு இந்த சித்து விளையாட்டுக்கள் தடை அல்லவா?’ என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றான். இவ்வளவு பெரிய விஷயத்தை எளிதாக, தன் புத்தியில் உரைக்கும்படி எடுத்துக் கூறிய அந்த இளைஞனை, முனிவர் ஏறிட்டுப் பார்த்தார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்த இளைஞர் அங்கிருந்து மாயமாய் மறைந்து போனான். ஆம்! இளைஞனாய் வந்தவர் இறைவன் தான். கண்ணீருடன் இறைவனை கையெடுத்துக் கும்பிட்ட முனிவர், அன்று முதல் தன்னுடைய சித்து வேலைகளை விட்டு விட்டு, தன் முழு கவனத்தையும் இறைவனின் மீதும், ஆன்மிக பணிகளின் மீதும் செலுத்தத் தொடங்கினார்
+