கொல்கத்தா/டெல்லி,

மேற்கு வங்காள மாநிலம் கிழக்கு மிட்னாபூரில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளர். சிறுமியை நேற்று மாலையில் இருந்து காணவில்லை. இந்நிலையில் அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் காலை கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் 22 வயது இளம்பெண் ஓடும் காரில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மதுரவை சேர்ந்த இளம் பெண் குர்கானில் இருந்து திரும்பிய போது அவரை கடத்தி சென்று மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மர்ம கும்பல் பெண்ணிடம் இருந்த ரூ. 5 ஆயிரத்தையும் கொள்ளை அடித்து சென்றுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மராட்டிய மாநிலம் மும்பையில் 35 வயது பெண் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மும்பை மாடல் ஒருவர் அம்மாநில உயர் போலீஸ் அதிகாரிக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் பராச் மாவட்டத்தில் கடந்த 2007ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி விக்கிக்கு மாவட்ட கோர்ட்டு 10 வருடம் ஜெயில் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் சாமிலியில் தந்தை மற்றும் தங்கையை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தன

0 comments:

கருத்துரையிடுக

+