ராணுவ வீரர்களை கொலைசெய்து தலைகீழாக தொங்கவிட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம்


undefined
ஈராக்கில் ராணுவ வீரர்களை கொலை செய்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைகீழாக் தொங்கவிட்டு வெறியாட்டம் ஆடியுள்ளனர்.

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. தங்களிடம் பிணைய கைதியாக சிக்குபவர்கள் மிகவும் கொடூரமான முறையில் அவர்கள் கொலை செய்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோவை வெளியிட்டு உலகையே அதிர்ச்சியில் உரையசெய்துள்ளனர். தலையை வெட்டி கொலை செய்வது, பெட்ரோல் ஊற்றி எரிப்பது என பல்வேறு அட்டூழியங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் தாக்குதல் நடத்தி வருகிறது. தங்களிடம் சிக்கும் ராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

ஈராக்கில் ராணுவ வீரர்களை கொலை செய்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைகீழாக தொங்கவிட்டு வெறியாட்டம் ஆடியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது, என்று புகைப்படங்களுடன் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள கிர்குக் மாகாணம், ஹாவிஜா நகரில் பெரும் கொடூரம் அரங்கேறியுள்ளது. தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கிய ராணுவ வீரர்களை கொலை செய்து, நகரின் நுழைவு வாயிலில் அவர்களை தொங்கவிட்டு வெறியாட்டம் ஆடியுள்ளனர். புகைப்படத்தில் பெண்களும், ஆண்களும் இச்சம்பவத்தை பார்க்கும் படுபாவும் இடம்பெற்றுள்ளது.

ராணுவ வீரர்கள் கூண்டுக்கள் அடைக்கப்பட்ட நிலையில் நகர் முழுவதும், ஆரஞ்சு நிற உடையில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஊர்வலாமாக கொண்டு செல்லப்படும் ராணுவ வீரர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமாக தாக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது

0 comments:

கருத்துரையிடுக

+