இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்த்தா,

மத்திய இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் மத்திய பகுதியான சுலாவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுலாவேசி மாகாணத்தின் வடகிழக்காக 58 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கமானது மையம் கொண்டு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

+