ஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் 54 தீவிரவாதிகள் பலி

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசு படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஆப்கான் ராணுவமும், நேட்டோ படையினரும் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள ஹாஸ்னி, காந்தஹார், லக்மேன், பார்யாப் மற்றும் ஷாரி புல் மாகாணங்களில் நேற்று ஆப்கான் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து 24 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 49 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் ஹெல்மந்த் தெற்கு மாகாணப்பகுதியில் நடந்த தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவங்களில் 2 ராணுவ வீரர்கள் இறந்ததாக ஆப்கான் ராணுவம் தெரிவித்து உள்ள

0 comments:

கருத்துரையிடுக

+