இயந்திர துப்பாக்கி வெடிகுண்டுகளை தாங்கிய குழந்தை படங்கள் தீவிரவாதிகள் வெளியிட்டனர்


ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை பிடித்து வைத்து உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் அவற்றை இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். உலகம் முழுவதும் இருந்தும் பல்வேறு நாட்டை சேர்ந்த ஜிகாதி ஆர்வலர்களை தங்கள் இயக்கத்தில் சேர்த்து வருகின்றனர்.இதனால் பல நாடுகள் அதற்கு தடைவிதித்து உள்ளன. சிறுவர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆயுத பயிற்சி அளித்து வருவதாக ஏற்கனவே ஐ.நா குற்றம் சாட்டி வருகிறது.

ஐ.எஸ். தீவிரவாதிகள், பிணைக்கைதிகளை பிடித்து தலையைத் துண்டித்து படுகொலை செய்து, அதை வீடியோ படம் எடுத்து, ஆன்லைனில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்த தங்கள் பிரசார உத்திகளாக பயன்படுத்தி வருய்கின்றனர். சமீத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் இஸ்ரேலை சேர்ந்த அரேபிய பிணைக்கைதி ஒருவரை மதத்துடன் தொடர்புடைய இரண்டு வார்த்தைகளை கூறி விட்டு, நெற்றிக்கு நேராக சுடுகிறான். இதில் அவர் சரிந்து விழுந்தபோது, மீண்டும் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுடுகிறான். இதில் அவர் உயிரிழக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

0 comments:

கருத்துரையிடுக

+